2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

சிறுமிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியவரை தேடி வலைவீச்சு

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 19 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

தோப்பூரில் 3 மற்றும் 9 வயதுச்  சிறுமிகள் இருவரைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு  உட்படுத்திய சந்தேக நபரைக் கைதுசெய்வதற்காக அவரைத் தேடி வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சிறுமிகளின் மாமா உறவு முறையான ஒருவரே இம்மாதம் 3ஆம் திகதி இவர்களைத் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக தம்மிடம் அச்சிறுமிகளின் தாய் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

பாதிக்கப்பட்ட சிறுமிகள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X