Princiya Dixci / 2017 ஏப்ரல் 29 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, கோமரங்கடவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோமான முறையில் 5 கிலோகிராம் பன்றி இறைச்சியைத் தம்வசம் வைத்தியருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபரொருவருக்கு, 20,000 ரூபாய் அபராதம் விதித்து, திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்க, இன்று (29) உத்தரவிட்டார்.
கோமரங்கடவெவ.மயிலவெவப் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவருக்கே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த போதே, இவரிடமிருந்து 5 கிலோகிராம் பன்றி இறைச்சி கைப்பற்றப்பட்டதாக, கோமரங்கடவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
7 minute ago
39 minute ago
58 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
39 minute ago
58 minute ago
2 hours ago