2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

2 பிள்ளைகள் கடலுக்கு பலி: தாய் தப்பினார்

Kanagaraj   / 2014 செப்டெம்பர் 20 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-அமதூர் அமரஜீவ


தனது இரண்டு பிள்ளைகளை காப்பாற்றுவதற்காக தாயொருவர் கடலில் குதித்துள்ளதாகவும் அதில் பிள்ளைகள் இரண்டும் மரணமடைந்துவிட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலையில் கோணேஸ்வரா கோவிலுக்கு அருகில்  இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தாய் காப்பாற்றப்பட்டுள்ளார் என்று தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.

ஒரு மணியளவிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 9 வயதான மகனும் 12 வயது மதிக்கத்தக்க மகளுமே பலியாகியுள்ளார்.

கடலில் தத்தளித்தவர்களை அருகிலிருந்த கடற்படையினர் காப்பாற்றி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதே இரண்டு பிள்ளைகளும் மரணமடைந்துள்ளனர்.

கற்பாறைகளின் மேலிருந்து கடலை பார்த்து கொண்டிருந்த போது மகன் தவறி விழுந்து விட்டதாகவும் அவரை காப்பாற்றுவதற்கு முயன்ற போதே மகளும் கடலுக்கு விழுந்துவிட்டதாக அந்த பெண், பொலிஸாருக்கு அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் கந்தளாய் பிரதேசத்தைச்சேர்ந்தவர்கள்  என்று பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட அந்த பெண் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





You May Also Like

  Comments - 0

  • raheem Saturday, 20 September 2014 10:49 PM

    அய்யோ பாவம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .