2025 ஜூலை 09, புதன்கிழமை

திருகோணமலை மக்களின் நலன் கருதி விசேட சேவை

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 12 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எப்.முபாறக்)

திருகோணமலை நகராட்சி மன்றம் பொது மக்களின் நலன்கருதி விசேட சேவை நிகழ்வுகளை எதிர்வரும் நவம்பர் மாதம் மேற்கொள்ளவுள்ளதாக நகராட்சி மன்றத் தலைவர் க.செல்வராசா தெரிவித்தார்.

இந்த விசேட சேவையின் போது நீண்ட காலமாகவே தேங்கிக் கிடந்தப் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். குறிப்பாக, காணி பிரிவிடல், கட்டிட அனுமதி, காணிபெயர் மாற்றம், போன்ற விடயங்கள் இந்த விசேட சேவையின் போது மேற்கொள்ளப் படவுள்ளதாகவும் 300 பேர் வரை இந்த விசேட சேவையில் பயனடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வினை மேற்கொள்ள நகராட்சி மன்ற உத்தியோத்தர்கள், ஊழியர்கள், மற்றும் மன்ற உறுப்பினர்களும், அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாகவும் தெரிவிக்கும் நகராட்சி மன்றத் தலைவர், எதிர்காலத்தில் திருகோணமலை நகராட்சி மன்றம் நகர மக்களின் தேவைகளை கருத்திற் கொண்டு துரிதமுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .