2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

பாதுகாப்புக் கடவைகள் அமைத்துத்தருமாறு கோரிக்கை

Kogilavani   / 2013 மே 29 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.பரீத்


தம்பலகமத்தில் காணப்படும் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை காரணமாக உயிர் ஆபத்துக்கள் அதிகரித்திருப்பதாகவும் இதனால் பாதுகாப்புக் கடவை ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தம்பலகமம் பிரதேச சபையின்
தவிசாளர் எஸ்.எம்.சுபியான் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக சிராஜ் நகர், அரபா நகர், 95ம் கட்டை ஆகிய பகுதிகளிலுள்ள புகையிரத வீதிக் கடவைகள் பேராபத்துமிக்கவையாக உள்ளன.

இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு பலமுறை அறிவித்துள்ள போதும் இதுவரை காத்திரமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

பொது மக்களின் போக்குவரத்து நலனைக் கருத்திற்கொண்டு மிகவிரைவில் பாதுகாப்புக் கடவைகளை அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இதற்கு பிரதேச சபை  பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X