2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மர அலுமாரி விழுந்ததில் சிறுமி பலி

Super User   / 2013 ஓகஸ்ட் 14 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா பிரதேசத்திலுள்ள வீட்டொன்றில் வைக்கப்பட்டிருந்த மர அலுமாரி விழுந்ததில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையிலிருந்த சிறுமி இன்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.

கண்டி வைத்தியசாலையில் வைத்தே இந்த சிறுமி உயிரிழந்துள்ளார். இந்த சிறுமி கிண்ணியா றகுமானிய்யா நகரை சேர்ந்த  ஒன்பது வயதான அப்துல் ஜப்பார் சியானா என்பரே உயிரிழந்துள்ளார்.

தனக்கு வாங்கிய பெருநாள் ஆடையை அணிந்து அழகு பார்ப்பதற்காக அலூமாரியின் மேல் தட்டில் வைக்கப்பட்டிந்த புதிய ஆடையை அலுமாரியிலேறி எடுக்க முயன்றுள்ளார். இதன்போது அலுமாரி முன்புறமாக கவிழ்ந்துள்ளது.

சத்தத்தை கேட்டு வீட்டார்கள் வந்து பார்க்கின்ற போது அலுமாரிக்கு கீழே சிறுமி வீழ்ந்து கிடந்ததை அவதானித்துள்ளனர். உடனடியாக அச்சிறுமியை கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன அவசர சிகிச்சைக்காக அவர்  திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

எனினும் அங்கிருந்து அவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எவ்வாறாயினும் சிகிச்சை பலனளிக்காத  நிலையில் கண்டி வைத்தியசாலையில் இந்த சிறுமி இன்று உயிரிழந்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .