2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

'திருமலையில் முரண்பாடுகள் தோன்றுவதை அனுமதிக்க முடியாது'

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 19 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஒலுமுதீன் கியாஸ்

 
'இன ரீதியான வேறுபாடுகளோ, மத ரீதியான முரண்பாடுகளோ திருகோணமலை மாவட்டத்தில் தோன்றுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்த நாட்டின் நிலையான அபிவிருத்திக்கும்  பொருளாதார வளர்ச்சிக்கும்  மனித உழைப்பே அவசியமாகும்' என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சுசந்த புஞ்சிநிலமே தெரிவித்தார்.
 
திவிநெகும திட்டத்தின் கீழ், கிண்ணியா, காக்காமுனைப் பிரதேசத்தில் மரக்கறி சேகரிப்பு நிலையத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) உத்தியோகப்பூர்வமாகத் திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
 
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
 
'நான் ஒரு பௌத்தனானாலும் இந்த மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கே அதிகமான சேவைகளைச் செய்துகொண்டிருக்கிறேன். கிண்ணியா நகரசபைத் தலைவர் டாக்டர் ஹில்மியின் வேண்டுகோளுக்கினங்க, கிண்ணியா நகரசபை எல்லைக்குள் பல அபிவிருத்தி வேலைகளைச் செய்வதற்கு ஆயத்தமாக இருக்கிறேன்.

அதேபோன்று கிண்ணியா பிரதேச சபைத் தலைவரின் வேண்டுகோளுக்கினங்கவும் இந்த மரக்கறி சேகரிப்பு நிலையம் மாத்திரமன்றி இன்னும் பல அபிவித்தத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளேன்.
 
மணல் வீதியை கொங்ரீட் வீதியாக மாற்றுவதிலும் பார்க்க, போசாக்கான உணவுகளை உற்பத்தி செய்வதே இன்று முக்கியமானதாகும். இந்த நிலையத்தின் மூலம் இப்பிரதேசம் உப உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டும்.
 
பயிர்ச் செய்கைக்காக மரங்களை விரும்பியவாறு அழிக்க முடியாது. மரங்களையும் நாம் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. அப்போதுதான் எதிர்கால சந்ததியினர்களை நாம் வாழ வைத்தவர்களாக மாறுவோம்.

இவ்வைபவத்தில் அமைச்சரின் வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் கிண்ணியா பிரதேசத்தில் உள்ள பத்து முன்பள்ளிகளுக்கு அலுமாரிகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது' என்றார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .