2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கிழக்கில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்

Super User   / 2013 ஓகஸ்ட் 19 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


கிழக்கு மாகாணத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கான மைதானமொன்று அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை கிழக்கு மாகான முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் நிர்வாக தலைநகரான திருகோணமலையிலேயே இந்த கிரிக்கெட் மைதனாம் நிர்மாணிக்கப்படவுள்ளது என அவர் குறிப்பிட்டார். இதற்கான முன்னேற்பாடுகளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனமும் கிழக்கு மாகாண சபையும் இணைந்து மேற்கொண்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பான ஆரம்ப பேச்சுவாத்தையொன்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன பிரதிநிதிகளுக்கும் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீதிற்கும் இடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .