2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

புல்மோட்டை வைத்தியாசாலை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்தல்

Super User   / 2013 ஓகஸ்ட் 25 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, புல்மோட்டை பிரதேச வைத்தியாசாலை  மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர். அன்வர் தெரிவித்தார்.

இது தொடர்பாக மாகாண சபை உறுப்பினர் ஆர்.அன்வர் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"இந்த வைத்தியசாலையினை தரமுயர்த்துமாறு முன்னாள் மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ் சுபையிரின் கவனத்திற்கு என்னால் பலமுறை கொண்டுவரப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படடன. இந்த நிலையில் மாகாண சபை கலைக்கப்பட்டது. பின்னர் மாகாண சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்ட எம்.ஐ.எம்.மன்சூரின் கவனத்திற்கும் இது தொடபில் கொண்டுவந்தேன்.

இதனையடுத்து அவர் மேற்கொண்ட தொடரான நடவடிக்கையின் மூலம் புல்மோட்டை பிரதேச வைத்தியசாலை மாவட்ட வைத்தியசாலையாக  தரமுயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவினை சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய கலாநிதி வை.டி.நிஹால் ஜயதிலக செயலாளர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ளதுடன் இதன் பிரதி புல்மோட்டை வைத்தியாசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த தரமுயர்த்தலினால் புல்மோட்டை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களான குச்சசெளி, புடவைக்கட்டு, திரியாய், பரண மதவாச்சிய, மற்றும் தென்னமாடி போன்ற பிரதேசங்களில் வாழும் மூவின மக்களும் நன்மையடையவுள்ளனர்" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .