2025 ஜூன் 26, வியாழக்கிழமை

திருகோணமலை, சூடைக்குடாவில் மீள்குடியேற்றம்

Super User   / 2013 ஓகஸ்ட் 26 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை, மூதூர் கிழக்கு சூடைக்குடா கிராமத்தில் இருந்து இடம்பெயர்ந்த 56  குடும்பங்கள் இன்று திங்கட்கிழமை மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேச மக்கள் தமது சொந்த காணிகளை துப்பரவு செய்வதற்கான  அங்கீகாரத்தை மாவட்ட செயலாளர் மேஜனர் ஜெனரல் ரஞ்சித் சில்வா அனுமதி வழங்கியுள்ளார்.

கூனித்தீவு நாவலர் வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வின்போது   மூதூர் பிரதேச செயலாளர் பிரதீபன் முன்னிலையில் சூடைக்குடா பதில் கிராம சேவை உத்தியோகத்தர் க.செல்வnரெத்தினத்திடம் மாவட்ட செயலாளரின் கடிதம் வழங்கப்பட்டது.

இதில் திருகோணமமலை மாவட்ட கட்டளைத் தளபதி பிரிஹேடியர் விக்கிரமரத்தன, சம்பூர் கடற்படை முகாம் கட்டளை அதிகாரி  கே.ஜி.போல் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர். தமத சொந்த கிராமத்திற்குச் செல்வதற்காக கிளிவெட்டி நலன்புரி  நிலையத்தில் தங்கியிருந்தவர்கள் இராணவத்தினரால் பஸ்கள் மூலம் அழைத்துவரப்பட்டனர்.

கூனித்தீவில்  இருந்து 500 மீற்றர் தொலைவில் உள்ள டைக்குடா கிராமத்திற்கு கால்நடையாக  சென்ற இவர்கள் அங்குள்ள விநாயகர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் தமத காணிகளை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .