2025 ஜூன் 26, வியாழக்கிழமை

ஈச்சிலம்பற்றில் வீரர்கள் கிராம வீட்டுத் திட்டம் கையளிப்பு

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 21 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கத்திற்கமைய வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட வீரர்கள் கிராம வீட்டுத் திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

நிர்மாணத்துறை பொறியியல் சேவைகள் வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவங்ச தலைமையில் வைபவம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஜனசெவன 10 இலட்சம் வீடமைப்புக்கான தேசிய வீடமைப்பு மற்றும் குடியிருப்பு நடவடிக்கைக்கு உட்படும் ஈச்சிலம்பற்று வீரர்கள் கிராமம் மக்களிடம் கையளிக்கப்பட்டதோடு நிதியுதவிக்கான காசோலையும் வழங்கப்பட்டது.

கிழக்கு மாகாண சபை தவிசாளர் ஆரியவதி கலப்பதி, திருகோணமலை மாவட்ட செயலாளர் மேஜர் பெனரல் டி.ஆர்.டி. சில்வா, பிரதேச செயலாளர் பி. தனேஸ்வரன் உள்ளிட்டோரும் மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை உட்பட ,ன்னும் பல அதிகாரிகாரிகளும் பொதுமக்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஈச்சிலம்பற்று வீரர்கள் கிராமத்தில் 29 வீடுகள் ஜனசெவன வீடமைப்புத் திட்டத்தின்கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .