2025 ஜூன் 25, புதன்கிழமை

துஷ்பிரயோகம் : சந்தேக நபருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2014 மே 25 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

பாடசாலைக்கு சென்று வீட்டுக்கு திரும்பிய 11 வயது சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனை எதிர்வரும் ஜூன் மாதம் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் திருச்செந்தில் நாதன் முன்னிலையில் சனிக்கிழமை(24) சந்தேக நபரை ஆஜர்படுத்தியதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய தினமுள்ளே கங்கானல்லாகே அஜித் சானக சுதுமாத்தையா (23வயது) என்பவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் மொறவெவ பகுதியைச் சேர்ந்தவரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .