2025 ஜூன் 25, புதன்கிழமை

தீயணைப்புப் படைப்பிரிவு திறந்துவைப்பு

Kanagaraj   / 2014 ஜூன் 03 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்


திருகோணமலை நகரசபைத்தலைவர் க. செல்வராஜா மற்றும்  உறுப்பினர்களால் தீயணைப்புப் படைப்பிரிவு உத்தியோகபூர்வமாக திங்கட்கிழமை(02) திறந்துவைக்கப்பட்டது.

நெதர்லாந்து அரசாங்கத்தின்   6 கோடி 50 இலட்சம் உதவியுடன் 2010ஆம் ஆண்டளவில் ஒப்பந்தமிடப்பட்ட இந்த திட்டம் மூலம் தீயணைப்பு பிரிவு கட்டடமானது திருகோணமலை மத்திய வீதியில் (மடத்தடி சந்தி) ஆரம்பிக்கப்ட்டள்ளது.
 
1 கோடியே 50 இலட்சம் பெருமதியான கட்டிடமும் 4 கோடியே 70 இலட்சம் பெறுமதியான வாகனமான  மூன்று தீயணைப்பு வண்டிகள் மற்றும் 01 அம்புலன்ஸ் 01 கப் ரக  வாகனம் மற்றும் தளபாடங்கள் போன்றவை வழங்கப்பட்டன.

தீ அபாயம் தொடர்பான சம்பவங்கள் ஏற்பட்டால் பொது மக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கமாக 026-2222100 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான ஒரு தீயனைப்பு படைப் பிரிவு 1972ஆம் ஆண்டளவில் திருகோணமலை நகரசபையில் இருந்து வந்துள்ளது.இக்காலத்தில் அதனை நிர்வகிக்கும் அளவு நகரசபையிடம் நிதி இல்லாமையினால்   இடைநிறுத்தப்பட்டு  இருந்தது. தற்போதய தலைவரின் முயற்சியாலும் உறுப்பினர்களுடைய ஒத்துழைப்பினாலும் 40 ஆண்டுகளுக்கு பின்னர் தீயனைப்ப படையணி ஆரம்பிக்கப்ட்டள்ளது. அந்த 40 வருட காலமும் தீ அபாயம் தொடர்பான பிரச்சினையை திருகோணமலை கடற்படை தளத்தில் இயங்கி வந்த தீயனைப்பு நிலையமே இப் பணியை மேற்கொண்டு வந்தனர்.
 
அவர்களுடைய சேவைக்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டவர்கள் எனவும் இனி வரம் காலங்களில் மக்கள் விரைவான சேவையை பெறமுடியும் எனவும் திருகோணமலை நகர சபை தலைவர் க.செல்வராஜா நன்றி தெரிவித்தார்.





You May Also Like

  Comments - 0

  • thaya Saturday, 28 June 2014 03:02 PM

    இவரை ஒரு தலைவர் என்று யார் சொன்னது...???!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .