2025 ஜூன் 25, புதன்கிழமை

விபத்தில் முதியவர் பலி

A.P.Mathan   / 2014 ஜூன் 12 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ. பரீத்
 
மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் முதியவர் ஒருவர் பலியான சம்பவமொன்று நேற்று புதன்கிழமை இரவு 9.00 மணியளவில் நிலாவெளி இக்பால் நகர் 7 ஆம் கட்டையில் இடம் பெற்றுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
 
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் 70 வயது முதியாரான அல்லாப் பிச்சை செய்யது என்பவராவர்.
 
இவரது சடலம் திருகோணமலை பொது வைத்திய சாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
 
மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றவரை குச்சவெளிப் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணையும் மேற் கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .