2025 ஜூன் 25, புதன்கிழமை

வயோதிபர் மரணம்; சந்தேகநபருக்கு விளக்கமறியல்

A.P.Mathan   / 2014 ஜூன் 12 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
 
நிலாவெளி இக்பால் நகர் பகுதியில் நேற்று புதன்கிழமை (11) இரவு மோட்டார் சைக்கிளால் மோதி வயோதிபர் ஒருவர் இறப்பதற்கு காரணமான ஜெயசீலன் ஜெயதீபனை விளக்கமறியில் வைக்குமாறு திருகோணமலை பதில் நீதவான் தி.திருச்செந்தில்நாதன் உத்தரவிட்டுள்ளார்.
 
புதன்கிழமை இரவு இக்பால் நகர் பகுதியில் திருகோணமலை - புல்மோட்டை வீதியில் கால்நடையாக சென்றிருந்த அல்லாப்பிச்சை செய்யது (வயது 77) என்பவர் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஸ்தலத்திலே மரணமானார். இவரது சடலத்தை குச்சவெளி பொலிஸார் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைத்துள்ளனர்.
 
இவ்விபத்துக்கு காரணமான ஜெயசீலன் ஜெயதீபனை பொலிஸார் கைது செய்தனர். மோட்டார் சைக்கிளோட்டி மதுபோதையில் இருந்துள்ளார்.
 
சந்தேகநபரை குச்சவெளி பொலிஸார் இன்று வியாழக்கிழமை, திருகோணமலை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்தனர். அவரை இம்மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். 
 
பொது வைத்தியசாலைக்கு சென்ற பதில் நீதவான், உடலத்தை பிரேத பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமுாறு சட்டவைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டதுடன், பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் உடலத்தை கையளிக்குமாறும் உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .