2025 ஜூன் 25, புதன்கிழமை

திருமலையிலிருந்து வெடிபொருள் கடத்தியவர் கைது

Kanagaraj   / 2014 ஜூன் 14 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


திருகோணமலையில் இருந்து லொறியொன்றில்  10 கிலோகிராம் வெடிபொருட்களை கடத்திய அந்த லொறியின்  சாரதியை பொலிஸார், அநுராதபுரம் மணிக்கூட்டு கோபுரம் அருகில் வைத்து நேற்று கைதுசெய்துள்ளனர்.

நொச்சியாகம பிரதேசத்தை சேர்ந்த குறித்த சாரதியே கைது செய்யப்பட்டுள்ளார். அவரே அந்தலொறியின் உரிமையாளர் என்றும் தெரியவந்துள்ளது. 

சாரதியின் இருக்கைக்கு கீழ் பாதுகாப்பாக மறைத்துவைக்கப்பட்டிருந்த 500 டெட்டினேட்டர்கள் மற்றும் 40 மீற்றர் பியூஸ்கோட் ஆகியனவே மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .