2025 ஜூன் 25, புதன்கிழமை

ஐ.தே.க.வுக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு

Kanagaraj   / 2014 ஜூன் 22 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் புதிய அங்கத்தவர்களைச் இணைத்துக்கொள்ளும் நிகழ்வு சனிக்கிழமை(21) புல்மோட்டை பிரதேசத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், திகோணமலைத் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளருமான இம்ரான் மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட முகாமையாளர் குருகே உட்பட உள்ளுர் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இது பற்றி கருத்துத் தெரிவித்த இம்ரான் மஹ்ரூப் 'எங்களது முயற்சிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததோடு பலர் ஆர்வத்தோடு வந்து அங்கத்தவர்களாகச் சேர்ந்து கொண்டனர்.

புல்மோட்டையில் சனிக்கிழமை மாலை வரை ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் புதிய அங்கத்தவர்களாக இணைந்து கொண்டனர். சில முக்கியஸ்தர்கள் உட்பட தேர்தல் காலங்களில் இன்னும் பலர் எம்மோடு இணைவதாக வாக்குறுதி அளித்துள்ளனர்.

கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல் காலத்தை விட ஐக்கிய தேசியக்கட்சி நல்ல வளர்ச்சியை பெற்று வருவது மகிழ்ச்சியைத் தருகின்றது.' என அவர் மேலும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .