2025 ஜூன் 25, புதன்கிழமை

போஷாக்கு தொடர்பான விழிப்புணர்வு நடை பவனி

Kanagaraj   / 2014 ஜூன் 26 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்


தேசிய போஷாக்கு மாதத்தை முன்னிட்டு விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம்  முன்னெடுத்து வரும் சஞ்சீவி திட்டத்தின் மூலம் மூதூர் கிழக்கு பாட்டாளிபுரம் கிராமத்தில் போஷாக்கு தொடர்பான விழிப்புணர்வு நடை பவனி நேற்று(25)நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் 3 சீடி நிறுவனம், கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம்; பாதுகாப்பு படையினர் ஆகியோர்  ஓத்துழைப்பு வழங்கி பங்கு பற்றினர்.

அத்துடன் இரும்புச் சத்துள்ள உணவுப் பொருளை அதிகம் உட்;கொண்டு இரும்பு சத்து குறைபாட்டால் ஏற்படக் கூடிய நோய்களை கட்டுப்புடுத்துவோம் எனும் தொனிப் பொருளில் நடைபெற்ற இவ் ஊர்வலத்தில் பாட்டாளிபுரம் பாடசாலை மாணவர்கள் வழிப்புணர்வு பதாதைகளை கலந்துகொண்டனர்.

நிகழ்வின் போது இரும்புச்சத்து அதிகம் உள்ள சுத்தமான பசும் பால் மற்றும் காலை உணவு என்பன கலந்துகொண்ட அனைவருக்கும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .