2025 ஜூன் 25, புதன்கிழமை

வயோதிபப் பெண்ணின் வீட்டில் கொள்ளை

Kanagaraj   / 2014 ஜூலை 12 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏழை வயோதிபப் பெண்ணின் வீட்டில் நெல், அரிசி, பணம் என்பன கொள்ளையிடப்பட்ட சம்பவம் குறித்து சேருநுவர பொலிஸில் முறையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெருகல் பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள கறுக்காமுனைக் கிராமத்தில் வியாழக்கிழமை(10) வீட்டில் எவருமில்லாத சமயம் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் அங்கிருந்த 3 மூடை நெல், 25 கிலோகிராம் அளவான அரிசி மற்றும் 2 ஆயிரம் ரூபா பணம் என்பனவற்றைத் திருடிச் சென்றுள்ளதாக கணேசன் தங்கப்பிள்ளை (60 வயது) தெரிவித்தார்.

அரசசார்பற்ற நிறுவனங்களால் அமைத்துக் கொடுக்கப்பட்ட தற்காலிக கொட்டிலில் தான் தனியாகவே வாழ்ந்து வருவதாகவும் சம்பவ தினமான வியாழக்கிழமை அலயவரின் வீட்டில் தங்கியிருந்தபோது இந்த திருட்டுச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .