2025 ஜூன் 25, புதன்கிழமை

அரசியல்வாதிகள் நால்வர் பிணையில் விடுவிப்பு

Kogilavani   / 2014 ஜூலை 23 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிகுமார்

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் உட்பட 4 முக்கிய அரசியல்வாதிகள் இன்று புதன்கிழமை  (23) திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.ஏ.ரணராஜாவினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அரச நடவடிக்கைளுக்கு குந்தகம் விளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் சட்டமா அதிபர் திணைக்களம்    19 பேர மீது வழக்கு தாக்கல் செய்திருந்தது.

இவ் வழக்கு திருகோணமலை நீதிமன்றில்  கடந்த 10 ஆம் திகதி விசாரணைக்கு எடுததுக் கொள்ளப்பட்டபோது, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.மஹ்ரூப், கிண்ணியா நகரசபை தலைவர் டொக்டர் ஹல்மி, கிண்ணியா பிரதேச சபை தலைவர்  எஸ்.எம்.எல்.ஜவாத்துள்ளா ஆகியோர் மன்றில் சமூகமளித்திருக்கவில்லை.  ஏனைய 14 பேரும் சமூகமளித்திருந்தனர்.

இந்நிலையில், மேற்படி நால்வரையும் இன்று (23)  நீதிமன்றில் சமூகமளிக்கச் செய்யுமாறு பொலிஸாருக்கு நீதவான் அன்றைய தினம் உத்தரவிட்டிருந்தார். இதற்கமைவாக மேற்படி நால்வரும் இன்று புதன்கிழமை(23) நீதிமன்றிற்கு சமூகமளித்திருந்தனர்.

வழக்கினை விசாரணைக்கு எடுத்துகொண்ட நீதிபதி ரணராஜா ஒவ்வொருவரையும் 50,000 ரூபாய் காசுப்பிணையிலும் 200,000 ரூபாய் சரீர பிணையிலும் செல்லுமாறு உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .