2025 ஜூன் 25, புதன்கிழமை

விளம்பரப் பலகைகளுக்கு சேதம் விளைவிப்பு

Kogilavani   / 2014 ஜூலை 27 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


திருகோணமலை, உப்புவெளிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலஸ் தோட்டப் பகுதியில் அமைந்திருந்த கடற்கரையோர உல்லாச விடுதிகளின் முகப்பு விளம்பரப் பலகைகள் இனந்தெரயாதோரால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக உப்புவெளிப் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை(27) தெரிவித்தனர்.

உல்லாச விடுதியினர் சனிக்கிழமை(27) ஏற்பாடு செய்திருந்த இசை நிகழ்வொன்றின்போது  ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த விளம்பரப் பலகைகள் சேதமாக்கப்பட்டதற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் குறித்து உப்புவெளிப் பொலிஸார் விரிவான விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .