2025 ஜூன் 25, புதன்கிழமை

புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 03 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ராஜ்குமார்


இலங்கை புற்றுநோய்ச் சங்கக் கண்டிக் கிளை, புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று சனிக்கிழமை (02) திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நகரசபையின் தலைவர் க. செல்வராஜா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு திருகோணமலை லோட்டஸ்பார்க் நிறுவனம் அணுசரனை வழங்கியது. நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக கண்டி புற்றுநோய் சங்கத்தின் தலைவர் மொஹான் சமரக்கோன், நகரசபை உறுப்பினர் கௌரி முகுந்தன் ஆகியோர் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தனர்.

இதன்போது திரகோணமலை நகரசபைத் தலைவர் க.செல்வராஜா வரவேற்புரை வழங்கினார்.

இன் நிகழ்வானது மாவட்டத்தில் அதிகமாக அடையாளம் காணப்படும் பல்வேறு வகையான புற்று நோய் தொடர்பான விழ்ப்புணர்வு நிகழ்வாக அமைந்ததுடன் பல அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .