2025 ஜூன் 25, புதன்கிழமை

கத்திக்குத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணுக்கு பிணை

Gavitha   / 2014 ஓகஸ்ட் 06 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

ஆண் ஒருவரை கத்தியால் குத்தியதாக குற்றச்சாட்டில் குச்சவெளி பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு புதன்கிழமை (06), குச்சவெளி சுற்றுலா நீதிமன்ற பதில் நீதவான் தி.திருச்செந்தில் நாதன் 100,000 ரூபாய் சதுரப்பிணையும் 10,000 ரூபாய் காசுப்பிணையும் என்ற நிபந்தனையின் கீழ் பிணையில் விடுதலை செய்தார்.

மேற்படி கத்திக்குத்துச் சம்பவம் திருகோணமலை கும்பறுப்பிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (02) இடம்பெற்றது.

கும்புறுப்பிட்டி 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரன் விஜயவாணி (வயது 35) என்பவரே சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டவராவார்.

மேற்படி பெண் தனது வீட்டில் மரக்கறி வெட்டிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த சுரேஸ் தக்சன் என்பவர் அப்பெண்ணுடன்  வன்முறையில் ஈடுபட முயற்சி செய்தபோது கையில் இருந்த கத்தியால் அவரை தாக்கியள்ளார் என சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .