2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கிண்ணியாவில் வருடாந்த பாடசாலை மருத்துவ பரிசோதனை

Gavitha   / 2014 செப்டெம்பர் 20 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஒலுமுதீன் கியாஸ்


கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய பணிமனையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வருடாந்த பாடசாலை மருத்துவ பரிசோதனை வேலைத்திட்டத்தின் கீழ், கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை வெள்ளிக்கிழமை (19) மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது தரம் 1, 4, 7, 10இல் கல்வி பயிலும் மாணவிகளுக்கு கண் மற்றும் உடல் பரிசோதனை மேற்கௌ;ளப்பட்டு தடுப்புசிகளும் மருந்துகளும் வழங்கப்பட்டன.

கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.றிஸ்வியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இவ்வைத்திய முகாமில் பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர்களும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .