2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

சிசுவின் சடலம் கரையொதுங்கியது

Gavitha   / 2014 செப்டெம்பர் 21 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கீதபொன்கலன்


திருகோணமலை, பள்ளதோட்டம் முருகன் கோயிலை அண்மித்த கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

சிசுவின் தலைப்பகுதி சேதமடைந்துள்ளதுடன், சிசு கடலில் அடித்து வரப்பட்டிருக்கக்கூடும் என சந்தேகிப்பதாகவும் பொலிஸார் கூறினர்.

மீட்கப்பட்ட சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .