2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

செயலமர்வு

Gavitha   / 2014 செப்டெம்பர் 22 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


'அனைவருக்கும் கல்வி, அனைத்தும் கல்விக்கே' எனும் தொனிப்பொருளில் சொலிட்ரெட் லைக்  (Solidared like)  நிறுவனம் தனது பங்கு நிறுவனங்களுடன் இணைந்து  தெரிவு செய்யப்பட்ட பாடசாலை அதிபர்களுக்கான செயலமர்வு திங்கட்கிழமை (22) திருகோணமலை சர்வோதயம் நிலையத்தில் நடைபெற்றது.

 இரு தினங்கள் நடைபெறவுள்ள (22,23) இச்செயலமர்வில்; மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளிலள்ள  36 அதிபர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

சிவில் சமுதாயத்தை, பாடசாலை அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவத்தினுள் உள்வாங்கப்படவேண்டும் என்ற நோக்கத்தை  நடைமுறைப்படுத்துமுகமாக இச்செயலமர்வு நடத்தப்படுகின்றது.

மேலும், பாடசாலை அதிபர்களுக்கிடையில் ஆளுமையை வெளிக்கொண்டுவருதல் மற்றும் பாடசாலை சமூகத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளதாக பயிற்சியின் பரிந்துரை இணைப்பாளர்  அப்பாஸ் ஹதாயத்துள்ளா தெரிவிததார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .