2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

பெண் சமூர்த்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல்

Kogilavani   / 2014 செப்டெம்பர் 23 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை, தம்பலாகமம் பிரதேச செயலப் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை  228 ஜி கிராம சேவகர் பிரிவில்  கடமையாற்றும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரான சுசீலா பொடிமெனிக்கே என்பவர் செவ்வாய்க்கிழமை (23) பெண் ஒருவரால் தாக்கப்பட்டு தம்பலாகமம் வைத்தியசாலையில் அனுமதிக்கபபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

'சகன அருண' என்ற வாழ்வின் எழுச்சித் திட்டத்திட்டத்தின் கீழ், சுயதொழில் ஊக்குவிப்புக்கான 50 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கும் நிகழ்வு முள்ளிப் பொத்தானை வாழ்வின் எழுச்சி வங்கியில் நடைபெற்ற போதே இவர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.

இச் சம்பவம் குறித்து தப்பலாகமம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பில் தாம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .