2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ஒலிம்பியாட் கணித போட்டியில் திருமலை மாணவன் சிறப்பு தேர்ச்சி

Kogilavani   / 2014 செப்டெம்பர் 24 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


சர்வதேச ஒலிம்பியாட் கணித போட்டியில் திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி மாணவன் எம்.ஏ.எம்.அப்ஹான் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளார்.

தென்கொரியாவில் அண்மையில் நடைபெற்ற இப்போட்டியில் 196 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்குபற்றினர். இப்போட்டியிலே இம்மாணவன் சிறப்பு தேர்ச்சியை பெற்றுள்ளார்.

இம்மாணவனை கௌரவிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (23) திருகோணமலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளர் அனஸ், திருகோணமலை வலயக் கல்வி பணிப்பளார் ந.விஜேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டு மாணவனை பாராட்டினர்.

இந்நிகழ்வில் மாணவனின் பெற்றோர்களும் பயிற்றுவித்த ஆசிரியரும் கௌரவிக்கப்பட்டார்கள்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .