2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

இராணுவ பஸ் மோதி விபத்து: பெண் பலி

Kogilavani   / 2014 செப்டெம்பர் 25 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.அப்துல் பரீட்

திருகோணமலை, கந்தளாய் பகுதியில் வியாழக்கிழமை(25) காலை இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் பலியாகியுள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கந்தளாயிலிருந்து ஹபரண நோக்கிச் சென்ற இராணுவ பஸ்ஸும் திருகோணமலையிலிருந்து கந்தளாய் நோக்கி வந்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த, கந்தளாயைச் சேர்ந்த ராணி (55 வயது) என்றே பெண்ணே பலியாகியுள்ளார். முச்சக்கர வண்டியின் சாரதி படுகாமயடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பில் இராணுவ பஸ் வண்டியின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .