2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கனடாவின் விசேட பிரதிநிதியுடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திப்பு

Thipaan   / 2014 செப்டெம்பர் 27 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


கனடா நாட்டின் விசேட பிரதிநிதி ஜவாத் குரோசி, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத்தை திருகோணமலையில் அமைந்துள்ள  முதலமைச்சர்  பணிமனையில் நேற்று வெள்ளிக்கிழமை  (26) சந்தித்து விசேட பேச்சு வார்த்தை நடத்தினார்.

இச்சந்திப்பில் பிரதானமாக கிழக்கில் போருக்கு பின்னரான நிலைமை மக்களின் இயல்பு வாழ்வு மூவின மக்களின் நல்லுறவு குறித்தும் கலந்துரையாடினார்கள்.

இதன் போது முதலமைச்சர் கல்வி, சுற்றுலா மற்றும்  கைத்தொழில் துறையை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் விசேடமாக அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற கைத்தறி (நெசவு)உற்பத்தியை நவீன முறையில் முன்னெடுப்பதோடு ஏற்றுமதி செய்வதற்கான ஒத்தாசைகளை  வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.

இதற்கு தான் முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவதாக கனடா பிரதி நிதி தெரிவித்தார். இதன்போது கிழக்கு மாகாண மாணவர்களின் கல்வி அபிவிருத்தி பற்றியும் பேசப்பட்டது.

இச்சந்திப்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் கிழக்குமாகாண சபை முஸ்லிம் கங்கிரஸ் குழுத்தலைவருமான  தலைவருமான  ஏ.எம். ஜெமீலும் கலந்து கொண்டார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .