2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

நிரந்தர நியமன கடிதங்கள் வழங்கிவைப்பு

Thipaan   / 2014 செப்டெம்பர் 28 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.அப்துல் பரீத்
,ஒலுமுதீன் கியாஸ்

கிண்ணியா பிரதேச சபையில் கடந்த 10 வருடங்களாக தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றிய 14 பேருக்கு கிழக்கு மாகாண முதலமைச்சரால், நிரந்தர நியமனத்துக்;கான கடிதங்கள் இன்று (28) வழங்கி வைக்கப்பட்டன.

கிழக்கு மாகாணத்தில் உள்ளுர் ஆட்சி மன்றங்களில் 15 வருடங்களுக்கு மேலாக தற்காலிக ஊழியர்களாக பணியாற்றிய வரும் 650 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் திட்டத்தின் கீழ் இந் நியமனம் வழங்கப்பட்டது.

அத்துடன் முதலமைச்சர்  நஜீப் ஏ. மஜீத்தின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட உழவு இயந்திரம் மற்றும் போட்டோ பிரதி இயந்திரம் போன்றவற்றை கிண்ணியா பிரதேச சபை தலைவர் எஸ்.எல்.எம். ஜவாதுல்லாவிடம் முதலமைச்சர் கையளித்தார்.

  கிண்ணியா பிரதேசபை கேட்போர் கூடத்தில் நடைபெறற் இந்நிகழ்வில்  முதலமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ. அஜீஸ், முதலமைச்சரின் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.தமிழ்ச்செல்வன் உட்பட கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .