2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

தமிழரசுக்கட்சியின் புதிய நிர்வாகிகளுக்கான வரவேற்பு நிகழ்வு

Thipaan   / 2014 செப்டெம்பர் 29 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கீதபொன்கலன்


இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கான வரவேற்பு நிகழ்வு, கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இன்று(29) மாலை நடைபெற்றது.

கட்சியின் தலைவராக அண்மையில் தெரிவு செய்யப்பட்ட யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஐா, மத்திய செயற்குழுவின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் பொதுச்செயலாளராக தெரிவு செய்யப்பட்ட கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் கி.துரைராஐசிங்கம் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளையின் தலைவரும், கிழக்கு மாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவருமான சி.தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கட்சியின் நிர்வாகிகள் உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .