2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

' தேவையற்ற வழக்குகள் தாக்கல் செய்வது நிறுத்தப்பட வேண்டும்'

Thipaan   / 2014 செப்டெம்பர் 30 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -ஏ.எம்.அப்துல் பரீத்

காணிவிடயங்களில் தேவையற்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு பொதுமக்கள் சிரமப்படுத்தப் படுகின்றார்கள். எனவே, இவ்வாறான நிகழ்வுகள் நிறுத்தப்படவேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர், திங்கட்கிழமை (29)  தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் சுசந்தபுஞ்சிநிலமே தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

காணி சம்பந்தமாக தேவையற்ற விடயங்கள் பல இம்மாவட்டத்தில் முன்னெடுக்கப் படுகின்றன. சில விடயங்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் தொடர்பில்லாத நிலையில் சில தீர்மானங்கள் எடுக்கப் படுவதாக அறிகின்றேன். இதுவே தேவையற்ற பிரச்சினைகள் தோன்ற காரணமாகின்றது.

நீண்டகாலம் பொதுமக்கள் குடியிருக்கும் அல்லது பராமரிக்கும் காணிகள் தொடர்பில் குச்சவெளி பிரதேச செயலாளரால் கடந்த காலத்தில் பலவழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்கள் தரப்பில் நியாயம் இருக்கின்ற காரணத்தால் இவ்வாறான பல வழக்குகள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
எனவே, இங்குசரியான அணுகுமுறை இல்லாததால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இதனை மனிதாபிமான ரீதியில் அணுகவேண்டும்.

தேவையற்ற வழக்குகள் பதிந்து பொதுமக்களை சிரமப்படுத்துவதை பிரதேச செயலாளர்கள் கைவிட வேண்டும் என்றார்.  இதற்குப் பதிலளித்தகுச்சவெளி பிரதேச செயலாளர் தான் இந்தச் சேவை நிலையத்தில் புதிதாகக் கடமையேற்றிருப்பதாகவும் இது போன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் இடம்பெறாதுகவனம் செலுத்தப்படும் என்று கூறினார்.

அரசாங்க அதிபர் மேஜர் ரஞ்சித் சில்வா,மேலதிக அரசாங்க  அதிபர் எஸ். அருள்ராசா, திட்டமிடல் பணிப்பாளர் திருமதி குகவதனி பரமேஸ்வரன் உட்படமற்றும் பலஅதிகாரிகளும், படைஅதிகாரிகளும் மாகாணசபை உறுப்பினர்களும் உள்ளூராட்சிமன்றத் தலைவர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .