2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

புனர்நிர்மாணம் செய்யப்பட்ட பள்ளிவாசல் திறந்து வைப்பு

Thipaan   / 2014 ஒக்டோபர் 04 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.அப்துல் பரீத்


60 வருடம் பழமைவாய்ந்த வெள்ளைமணல் நீரோட்டுமுனை முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாசல், தனவந்தர்கள் மற்றும் பொதுமக்களின் நிதி உதவியுடன் 90 இலட்சம் ரூபாய் செலவில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு நேற்று  வெள்ளிக்கிழமை(03) திறந்து வைக்கப்பட்டது.

இதனை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

இந் நிகழ்வில்  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் மற்றும் உலமாக்களும் கலந்து கொண்டனர். அத்தோடு  உலமா மௌலவி ஒருவருக்கு நினைவுச்சின்னம் வழங்கி வைத்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .