2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ஆலயம் உடைக்கப்பட்டமைக்கு யோகேஸ்வரன் எம்.பி. கண்டனம்

Thipaan   / 2014 ஒக்டோபர் 14 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்; பாலத்தடிச்சேனை நாகதம்பிரான் ஆலயத்தில் பல பொருட்கள் உடைக்கப்பட்டதோடு மின்பிறப்பாக்கியும் திருடப்பட்டுள்ள சம்பவத்தைத் தான் வன்மையாகக் கண்டிப்பதாக, மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவைத் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக அவர், இன்று செவ்வாய்க்கிழமை (14) வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பாலத்தடிச்சேனை நாகதம்பிரான் ஆலயம், சில விஷமிகளால் ஞாயிற்றுக்கிழமை (12) இரவு சேதமாக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளியன்று (10) பாலத்தடிச்சேனையில் நாகதம்பிரான் ஆலயத்துக்கு அருகிலிருந்த முருகன் ஆலய கொடித்தம்பப் பிள்iயார் சிலையும் உடைக்கப்பட்டது.

இவ்விரு ஆலயங்களின் மிக அருகிலேயே இராணுவ காவற்சாவடி ஒன்று அமைந்துள்ளது. இந்த நிலையில் நடைபெற்ற இத் திருட்டு தொடர்பாக பொது மக்கள் சந்தேகங்களை எழுப்புகின்றனர்.

இந்த விஷம செயற்பாடுகள் மிகவும் வன்மையான கண்டனத்துக்குரியவை. விசேட பூசை கிரியைகள் ஒழுங்குபடுத்த தீர்மானித்த வேளை இச்சம்பவம் நடந்துள்ளது.

இது தொடர்பாக தீவிர விசாரணையை மேற்கொள்வதுடன் இந்து ஆலயங்களில் இடம்பெறும் இவ்வாறான அச்சுறுத்தல்களை தடுத்து நிறுத்த வேண்டும்.

இச்செயல்களை மேற்கொண்டு வருபவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என பொலிஸாரைக் கேட்டுள்ளதாக தனது கண்டன அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .