2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கணினி ஆய்வுக்கூடங்கள் திறந்து வைப்பு

Gavitha   / 2014 ஒக்டோபர் 14 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள கணினி ஆய்வுக்கூடங்கள் இன்று செவ்வாய்க்கிழமை (14) வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டது.

மஹிந்த சிந்தனைக்கேற்ப தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் வேண்டுகோளுக்கிணங்க, ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் இதனை திறந்துவைத்தார்.

கந்தளாய், தம்பளகாமம், கிண்ணியா, கோமரன்கடவெள, குச்சிவெளி, திருகோணமலை ஆகிய பகுதிகளிலுள்ள 8 தமிழ், முஸ்லிம் பாடசாலைகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். மேலும் மக்கள் பாவனைக்கான மையநிலையம் (அறிவகம்) ஒன்றையும் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து மலையகம், வடகிழக்கு, மேல் மாகாணம் போன்றவற்றில் இயங்கி வரும் தமிழ், முஸ்லிம் பாடசாலைகளுக்கு கணினி ஆய்வு கூடங்களை கட்டுவதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .