2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

நீதிகோரி சுகாதார தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2014 ஒக்டோபர் 20 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்


தமது தொழிலின் நிரந்தர நியமனத்தின்போது தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளமைக்கு சரியான நீதிகோரி திருகோணமலை, பட்டினமும் சூழலும் பிரதேசசபை (உப்புவெளி) மற்றும் திருகோணமலை நகரசபையின் சுகாதார தொழிலாளர்கள் திங்கட்கிழமை(20)  காலை (8) மணியளவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை, உட்;துறைமுக வீதியில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் ஆலவலகத்துக்கு முன்பாக இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாரும் கிழக்கு மாகாண உள்ளுராட்சிமன்ற தொழிலாளர் சங்கத்தினரும் கலந்துகொணடனர்.

இப்போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண உள்ளுராட்சிமன்ற தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கே.எஸ்.கண்ணன்,
'கடந்த 15ஆம் திகதி உப்புவெளி பிரதேச சபையால் சுகாதார தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட நிரந்தர நியமனமானது சேவை மூர்ப்பு அடிப்படையில் வழங்கப்படாது பிரதேச அடிப்படையில் வழங்கப்;பட்டுள்ளது.

வீதித் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நியமனத்தில் அலுவலகத்தில் பணியாற்றும் பல பெண்களுக்கும் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இச்செயலை கண்டிக்கின்றோம். நாம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடாது பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களும் தொழிற்சங்கத்தினரும் இணைந்து ஆளுநரிடம் முறையிட்டு வழங்கப்பட்ட நியமனங்களை மீள் பரிசீலனை செய்யுமாறு கோருவதற்கே இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம்.

திருகோணமலை பொது வைத்தியசாலை உள்ள இடத்தில் குடியிருந்த நகரசபையின் சுகாதார தொழிலாளர்கள், வைத்தியசாலை விரிவுப்படுத்தும் செயற்திட்டம் காரணமாக பாலையூற்று, பூம்புகார் கிழக்கு எனும் இடத்தில் குடியேற்றப்பட்டனர்.

இவ்வாறு குடியேற்றப்பட்டவர்கள் உப்புவெளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்திலேயே குடியேற்றப்பட்டார்கள். எனவே தற்போது நகரசபையில் தொழில்புரியும் சுகாதார தொழிலாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க முடியாத நெருக்கடியான நிலையில் திருகோணமலை நகரசபை நிர்வாகமும் உள்ளது.

15 வருடங்களுக்கு மேல் தற்காலிக தொழிலாளர்களாக பணியாற்றியவர்கள் இந்த காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க முடியாது என மாகாணசபை சுற்றறிக்கையும் அமைந்துள்ளது.

கடந்த, 2013.1.1 சுற்றறிக்கையின் பிரகாரம் அந்தந்த உள்ளுராட்சி மன்றங்களில் வரி செலுத்துபவர்களுக்கே நியமனம் வழங்கப்பட வேண்டும் என்பதற்கு அமையவே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நியமனம் ஒரு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்;பட்டிருந்தால் இந் நிலை ஏற்பட்டிருக்காது.

பல இன்னல்களுக்கு மத்தியில் நகரத்தை சுத்தமாக வைத்திருக்க பாடுபட்ட தொழிலாளர்களுக்கு எவ்வித ஏமாற்றமும் ஏற்படாது அவர்களுக்கு மனிதாபிமான ரீதியான நீதி கிடைக்க வேண்டும் என்று கோரியே இந்த கவனயீர்ப்பு மூலம் ஆளுநருக்கு இந்த விடயத்தை தெரிவிக்கின்றோம்' என அவர் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .