2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மக்காவுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திகொடுக்கப்படும்: ஜனாதிபதி

Kogilavani   / 2014 ஒக்டோபர் 29 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.அப்துல் பரீத், ஒ.கியாஸ் ஷாபி, வடமலை ராஜ்குமார்

'இந்நாட்டில் வாழ்கின்;ற இஸ்லாமிய சமூகத்தினர் அனைவருக்கும் ஒருமுறையாவது மக்கா நகருக்கு செல்வதற்கான வசதி வாய்ப்புகளை எதிர்வரும் வருடத்திலிருந்து நாம் பெற்றுக் கொடுப்போம்' என ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஷ செவ்வாய்க்கிழமை(28) தெரிவித்தார்.

திருகோணமலைக்கு செவ்வாய்க்கிழமை(29) விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கிண்ணியா அல்- அக்ஷா கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட மஹிந்தோதைய தொழில்நுட்ப ஆய்வு கூடத்தை  உத்தியோகப்பூர்வமாக திறந்து வைத்தார்.

இதன்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

 'ஒருவர் ஒருமுறையாவது மக்கா நகருக்கு செல்ல வேண்டும் என முஸ்லிம் மதம் வலியுறுத்துகின்றது. பணபலமுள்ளவர்கள் மட்டுமே அடிக்கடி மக்கா நகருக்கு சென்று வருகிறார்கள். ஆனால் வறிய மக்களுக்கு இந்த சந்தர்ப்பம் கிடைப்பதில்லை.

இதனால்,  இவ்வாய்ப்புகளை ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும் பெற்றுகொடுப்பதற்கான நடவடிக்கைகளை அடுத்த வருடத்திலிருந்து முன்னெடுப்போம் என இச்சந்தர்ப்பத்தில் கூறிகொள்ள விரும்புகின்றேன்.

30 வருட பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு பயம், சந்தேகம் இல்லாத சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

பணத்தை களவாட முடியும், காணிகள் சொத்துக்கள் இருக்கலாம் அவைகள் சுனாமியால் பறிபோகலாம். திருடர்கள் திருடிச் செல்ல முடியும். ஆனால் கல்வி அறிவை யாரும் பறித்துச் செல்ல முடியாது.

நாங்கள் ஆட்சிக்கு வந்து முதலாவதாக பயங்கரவாதத்தை இல்லது ஒழித்தோம்.  இன்று அமைதியாக வாழும் சூழலை நாட்டில் ஏற்படுத்தியுள்ளோம்;. அடுத்தடுத்து பல அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்' என அவர் மேலும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .