2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

பாலர் பாடசாலை மூடப்பட்டதற்கு எதிராக பெற்றோர் ஆர்ப்பாட்டம்

Gavitha   / 2014 நவம்பர் 08 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்

வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்லடி பாலர் பாடசாலை மாணவர்களின் பெற்றோர், வெள்ளிக்கிழமை (07) வழமைக்கு மாறாக பாடசாலை பூட்டப்பட்டிருந்ததை அடுத்து ஆர்பாட்டமொன்றில் ஈடுப்பட்டனர்.

தமது பிள்ளைகளை வழமை போல பாடசாலைக்கு அழைத்துச் சென்ற போது, குறித்த பாடசாலை விகாராதிபதியினால் பூட்டப்பட்டிருந்ததை அடுத்து, விகாராதிபதியுடன் தொடர்பு கொண்டு வினவினர்.

அதற்கு விகாராதிபதி கூறிப்பிட்டதாவது,

இப்பாடசாலை விகாரைக்கு உரிய இடத்தில் அமைந்துள்ளது. இங்கு பாடசாலையை நடத்த முடியாது.  விகாரைக்கு இக்கட்டடம் தேவையாக உள்ளது எனக்கூறி திறக்க மறுத்து விட்டார்.

தொல்லியல் திணைக்களத்தால் காணி அளவீடுகள் செய்யப்பட்ட போது பாலர் பாடசாலை கட்டடம் அமைந்த நிலப்பரப்பு தவிர்த்து  விகாரைக்குரிய காணி அளவீடு செய்யப்பட்டு இருந்தது.

பல வருடங்களாக குறித்த கட்டடத்திலேயே பாடசாலை இயங்கி வருகின்றது.

இந்நிலையிலேயே, விகாராதிபதியின் செயலை கண்டித்து பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சேருவில பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, இராணுவ முகாம் பொறுப்பதிகாரி,  வெருகல் பிரதேச  சபை தலைவர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து இரு தரப்பினருடனும் பேச்சிவார்த்தை நடத்திய போதும், எவ்வித ஆரோக்கியமான முடிவும் இதில் காண்ப்படவில்லை.

இவ்விடயம் தொடர்பில், நாளை சனிக்கிழமை (09) வெருகல் பிரதேச  செயலாளர் அலுவலகத்தில்  பாலர் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், பிரதிநிதிகள், கிராம சங்க பிரதிநிதிகள், பிரதேச  சபை தலைவர், பொலிஸ், இராணுவ அதிகாரிகள் அடங்கிய குழுவினருக்கிடையில் பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .