2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக நிகழ்வு

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 09 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்

பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக சர்வதேச 16 நாள் செயற்பாட்டு நிகழ்வுகள் அனைத்துப் பிரதேசங்களிலும் நடைபெற்றுவரும் நிலையில், இந்த நிகழ்வு திருகோணமலை, குச்சவெளி பிரதேச பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் சலப்பையாறு சமூக பராமரிப்புமையக் கட்டடத்தில் நடைபெற்றது. 

சில கிராமங்களில்  இடம்பெறும் பெண்கள் மீதான வன்முறைகளை தடுக்கும் வகையில் தெளிவுபடுத்துதல் மற்றும் தொடர் வேலைத்திட்டங்களுக்கான செயலமர்வாக இந்த நிகழ்வு அமைந்தது. இந்நிகழ்வில் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.

திருகோணமலை மாவட்ட இளைஞர் அபிவிருத்தி அகம் அமைப்பின் மதியுரைஞர் பொ.சற்சிவானந்தத்தனின் நெறிப்படுத்தலிலும் குச்சவெளி பிரதேச பெண்கள் வலையமைப்பின் தலைவி ம.கஜநிதியின்  தலைமையிலும் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில்; விருந்தினர்களாக பட்டினமும்சூழலும் பிரதேச பெண்கள் வலையமைப்பின் தலைவி நா.ஜெயலெட்சுமிப்பிள்ளை, திருகோணமலை மாவட்ட இளைஞர் அபிவிருத்தி அகம் அமைப்பின்  பிரதி இணைப்பாளர் செ.கலாரதன், கும்பிறுபிட்டி கிழக்கு, சலப்பையாறு கிராம சேவகர் பிரிவுகளின்  கிராமசேவை அலுவலர் எஸ்.நித்தியலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .