2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

அடிக்கல் நடும் நிகழ்வு

Thipaan   / 2014 டிசெம்பர் 11 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்

நிலாவெளி ஆறாவது மைல்கல் கோணேசபுரியிலுள்ள திருகோணமலை வளாகத்தில், புதிதாக அமைக்கப்படவுள்ள கட்டடங்களுக்கான அடிக்கற்களை உயர் கல்வி அமைச்சர் எஸ்பி.திசாநாயக்கா, புதன்கிழமை(09) நட்டுவைத்தார்.

330 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள நான்குமாடி பௌதிக விஞ்ஞான பீட கட்டம், 233 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள 4 மாடி நூலக கட்டடம், 103 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள சிற்றுண்டிச்சாலை என்பனவற்றுக்கான அடிக்கற்களை நட்டு வைத்தார்.

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக பொறுப்பு அதிகாரி பேராசிரியர்  ரஞ்சித் பிறெமலால் டி சில்வாவின்; அழைப்பின் பேரில் அமைச்சர்; வருகை தந்திருந்தார்.

கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரமவும் கிழக்கு பல்கலைக்கழக  வேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தசாமி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .