2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

250 துவிச்சக்கர வண்டிகளுக்கு சீல் வைப்பு

Kogilavani   / 2015 ஜனவரி 27 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்


கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் செயலகத்தின் பொறுப்பில் வைக்கபட்டிருந்த 250 புதிய துவிச்சக்கர வண்டிகளுக்கு பொலிஸாரால் திங்கட்கிழமை(26) மாலை சீல் வைக்கப்ட்டுள்ளது.


இவ்வாறு சீல் வைக்கபட்ட 250 துவிச்சக்கரவண்டிகளும் உப்புவெளியில் உள்ள மாகாண விவசாய திணைக்கள களஞ்சிய சாலையில் வைக்கபட்டிருந்தாகவும் இதனை உப்புவெளி பொலிஸ் அதிகாரிகள் கண்டுபிடித்து சீல் வைத்ததுடன் நீதிமன்றத்தில் வழக்கு பதிவும் செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.


இந்த துவிச்சக்கர வண்டிகள் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக கொண்டுவரப்பட்டதாக சந்தேகம் எழுவதாகவும் உப்புவெளி பொலிஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .