Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 பெப்ரவரி 14 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்
கிழக்கு மாகாண ஆட்சியில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் பங்கெடுத்து, தமிழ் முஸ்லிம் சமூகங்களின் வரலாற்று ரீதியான இன உறவுக்கு வழி வகுத்து தேசிய முக்கியத்தும் மிக்க ஒரு முன்மாதிரியான வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்க முன்வர வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார்.
திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகாவித்தயாலயத்தில் வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற மீலாந்துந் நபி விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இந்த நாட்டில் கிழக்கு மாகாண சபை என்பது சகல இன மக்களையும் உள்வாங்கிய ஒரு சிறப்பு மாகாணமாகும். இதன் வெளிப்பாடாக, கடந்த 10ஆம் திகதி மாகாண சபையின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை அனைத்து கட்சிகளும் ஏகமானதாக ஏற்றுக்கொண்டன.
இது கிழக்கு மாகாணத்துக்கு கிடத்த ஒரு சிறப்பு வெற்றியாகும். அதேவேளை கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸினுடைய ஆளுகையின் கீழ் வந்திருக்கறது. இது பெருந்தலைவர் மர்ஹம் அஷ்ரப் உடைய கோட்பாட்டுக்கும் அவருடைய கனவுக்கும் நீண்ட கால போராட்டத்தின் பின்னர் கிடைத்த ஓர் தனித்துவ அடையாளமாகும்.
முதலமைச்சர் நியமனத்தின் மூலம் பெற்ற இந்த அடையாளம், முஸ்லிம் சமூகத்துக்கு உரியதொன்றானாலும் தமிழ் சமூகத்தை ஒருபோதும் ஒதுக்கி வைக்கவோ ஓரங்கட்டவோ முடியாது. தமிழ் பேசும் மக்கள் என்ற வகையிலும் வரலாற்று ரீதியாக பிண்ணிப் பிணைந்த இரு சமூகங்கள் என்பதாலும் அந்தச் சமூகத்தினுடைய அடையாளமாகவும் நாங்கள் அங்கிகரிக்க வேண்டும். அப்போதுதான் இந்த மாகாணத்தை தேசிய ரீதியல் முன்னுதாரணமான மாகாணமாக மாற்ற முடியும்.
தமிழ் கூட்டமைப்பு வரவு-செலவுத் திட்டத்துக்கு ஆதரவு கொடுத்து போல், ஆட்சியில் பங்காளர்களாக மாறி இந்த மாகாணத்தில் கடந்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து இன மக்களுக்காகவும் சிறந்த பணியாற்றி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதனூடாக இந்த மாகாணத்தை சுபீட்சமிக்க மாகாணமாக உருhக்க முடியும்.
இந்த வகையிலே இன, மத பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் பணிபுரிய கிழக்கு மாகாண புதிய முதலமைச்சர் உறுதிகொண்டிருக்கிறார்.
முழு மனித சமூதாயத்துக்கும் வழிகாட்டியாக வந்த முகம்மது நபியவர்கள், அவர்களுடைய ஆட்சியில் முஸ்லிம் அல்லாதவர்கள் அவர்களுடைய தனித்துவத்தோடு சுதந்தரமாக வாழவைத்தார்கள். இது எமக்கு ஒரு சிறந்த ஒரு முன்மாதிரியாகும் என்று தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
44 minute ago
2 hours ago
3 hours ago