2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

வைத்தியசாலைகளில் நிலவி வரும் குறைபாடுகளை நிவர்த்திப்பதாக உறுதிமொழி

Kogilavani   / 2015 பெப்ரவரி 17 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்


மூதூர் தள வைத்தியசாலையிலும் தோப்பூர் பிரதேச வைத்தியசாலையிலும் நீண்ட காலமாக நிலவி வரும் பௌதீக மற்றும் ஆளணி பற்றாக் குறைகளை அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் நிவர்த்தி செய்வதற்கு முடியுமான அனைத்து நடடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹீர் தெரிவித்தார்.


சுகாதார இராஜாங்க அமைச்சின் இணைப்புச் செயலாளர் எம்.எச்.எம்.பாயிஸ் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹிர் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை(15) மூதூர், தோப்பூர்; வைத்தியசாலைகளுக்கு விஜயம் செய்தபோது அங்கு பொது மக்களால் முன்வைக்கப்பட்ட குறைபாடுகளைக் கேட்டறிந்த பின்பே இவ்வாறு தெரிவித்தார்.    


மூதூர் தள வைத்தியசாலையில் 13 வைத்தியர்களுக்கும் 4 வைத்திய நிபுணர்களுக்கும்; தேவைப்படுவதாக இதன்போது எடுத்துரைக்கப்பட்டது.


இவற்றை விரைவாகத் தீர்க்கா விட்டால், அன்றாட வைத்திய சேவை மிக மோசமாக பாதிக்கப்படக்கூடிய நிலை ஏற்படுமென்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.


அத்தோடு சுpற்றூழியர்கள் பற்றாக்குறையும் நீண்ட நாளாக இருந்து வருகிறது. அவசர தேவைக்கு அம்பியுலன்ஸ் வண்டியில் செல்வதற்குக் கூட போதுமான சிற்றூழியர்கள் இல்லை என இதன்போது கூறப்பட்டது.


இதேவேளை, தோப்பூர் வைத்தியசாலையில் அடிக்கடி மின்சாரம் துன்டிக்கப்படுவது பாரிய பிரச்சினையாக உள்ளதென மக்கள் தெரிவித்தனர்.


இதனால் தங்கியிருந்து சிசிச்சை பெறுபவர்கள் பல்வேறு சிரம்மங்களை எதிர்நோக்கி வருதோடு இவர்கள் மூதூர், திருகோணமலை, கிண்ணியா போன்ற பிரதேச வைத்தியசாலைகளுக்குச் சென்று தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என சுட்டிக்காட்டினர்.


மூதூர் வைத்தியசாலையில் பழுதடைந்த விடுதியை புனர்நிர்மானம் செய்வதற்கு மூன்று இலட்சம் ரூபாயும்  தோப்பூர் வைத்தியசாலைக்கு மின்; பிரப்பாக்கி இயந்திரம் ஒன்றையும் தனது வரவு செலவுத்திட்ட நிதியில் இருந்து ஒதுக்குதாகவும் ஏனைய ஆளணிப் பிரச்சினைகளை அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ், இராஜாங்க சுகாதார அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய தீர்வைப் பெற்றுத்தருவதாகவும் லாஹிர் இதன்போது உறுதியளித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .