2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

நிறை உணவு தயாரிக்கும் திட்டம்

Kogilavani   / 2015 பெப்ரவரி 27 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்


மூதூர் பிராந்திய வைத்திய அதிகாரி பணிமனையும் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தினரும் இணைந்து  சஞ்ஜீவி திட்டத்தினூடாக 'ஒரு கோப்பை உணவில் நிறை உணவு' தயாரிக்கும் திட்டத்தை மூதூரில் உள்ள சகல கிராமங்களிலும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.


கிராம மட்டத்திலுள்ள அன்னையர் ஆதரவு குழு மற்றும் கிராம மாதர் அபிவிருத்தி சங்கத்தினர் இணைந்து பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.


மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 80 கிராமங்களில் இச்செயல் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


உள்ளுர் உற்பத்தியான காய்கரிகள், பழங்கள், கீரைகள், தானியங்கள், புரத உணவுகளை பாவித்து குறைந்த செலவில் மனித உடலுக்கு தேவையான 6 வகையான போசாக்கு சத்துக்களை எவ்வாறு பெறலாம் என்பதே இந்த விழிப்புணர்வின் பிரதான கருவாக காணப்படுகிறது.


யுத்தம், சுனாமி போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மூதூர் பிரதேசத்தில் போசாக்கு தொடர்பான பிரச்சினைகள் மக்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகின்றன.


பிறக்கும் குழந்தைகளுக்கும் நிறை குறைபாடுடன் காணப்படுவதை விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் ஆய்வொன்றினூடாக அறிந்துகொண்டதன் பிற்பாடு இச்செயல்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .