2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ஐ.தே.கவுக்கு புதிய அங்கத்தவர்களை சேர்க்கும் பணி

Thipaan   / 2015 மார்ச் 15 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத்

விரைவில் பொதுத் தேர்தலுக்கு தயாராகுவோம் என்ற தொனிப்பொருளில், ஐக்கிய தேசிய கட்சிக்கு திருகோணமலை மாவட்டத்திலிருந்து புதிய அங்கத்தவர்களைச் சேர்க்கும் பணி இன்று ஞாயிற்றுக்கிழமை (15) கிண்ணியா பிரதான வீதியில் இருந்து ஆரம்பமானது.

திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் மூதூர் தொகுதி அமைப்பாளருமான எம்.ஏ.ஏம்.மஃறூப் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது தவிசாளர் எம்.ஏ.ஏம்.மஃறூப் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த வாரம் நடைபெற்ற ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின்படி  ஏப்ரல் 22ஆம் திகதிக்குப் பிறகு புதிய தேர்தலுக்கு முகம் கொடுப்பதென்று செயற்குழு தீர்மானித்தது.

அதன் அடிப்படையில், எங்களுடைய வேலைத்திட்டத்தை திருகோணமலை மாவட்டத்தில் இன்று தொடக்கம் ஆரம்பித்திருக்கிறோம். திருகோணமலை மாவட்ட தவிசாளர் என்ற வகையில் திருமலை மாவட்டத்தின் மூன்று தொகுதிகளிலும் புதிய அங்கத்தவர்களைச் சேர்ப்பதற்கான வேலைத்திட்டத்தினை இன்று முதல் ஆரம்பித்திருக்கிறோம்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பெருமளவானோர் ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

மே மாதம் 31ஆம் திகதிக்கிடையில் அல்லது ஜூன் மாதத்தின் நடுப்பகுதியில் பொதுத்தேர்தலைச் சந்திப்பதென்று ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்திருக்கின்றது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் மூலம் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார். அவருடைய தலைமையில் இருக்கின்ற அமைச்சரவையிலே புனர்வாழ்வுக்கும் மீள்குடியேற்றத்துக்கும் ஒரு தமிழ் மகனை நியமித்திருக்கிறார்.

வடக்கிலும் கிழக்கிலும் சிவில் அதிகாரியை ஆளுநராக நியமித்திருக்கிறார். அதே போன்று 10 வருடங்களின் பின்னர் திருமலை மாவட்டம் சிவில் அதிகாரி ஒருவரை அரசாங்க அதிபராக கண்டிருக்கிறது.

எனவே சிறுபான்மையினரை கௌரவப்படுத்துகின்ற ஜனாதிபதியையும் பிரதமரையும் உருவாக்கிய இந்த நாட்டு மக்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பலமிக்க நாடாளுமன்றம் ஒன்றை அமைத்து சிறுபான்மையின மக்களின் இருப்பையும் தனித்துவத்தையும் பாதுகாப்பதற்கு இம் மாவட்ட மக்கள் ஐக்கிய தேசிய கட்சியின் பக்கம் அணி திரள வேண்டும் எனத் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .