2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொடுப்பனவு

George   / 2015 மார்ச் 21 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ், அப்துல் பரீட்
 
அரசாங்கத்தின் நூறு நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான 20 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் வைபவம், சனிக்கிழமை(21) கிண்ணியாவில் நடைபெற்றது. 

இதன்முதற்கட்டமாக கிண்ணியா பிரதேச கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் பெறுமதியான போசாக்கு அடக்கிய உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. 

கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.சி.அன்சார் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில், உள்நாட்டு போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக், திருமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்மகுமார மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .