2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

விழிப்புணர்வு துண்டுப்பிரசுர விநியோகம்

Thipaan   / 2015 மார்ச் 23 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

கொட்டியாரக்குடாவின் சம்பூரில் அமைய இருக்கும் அனல் மின் நிலையத்தினால், திருகோணமலை மாவட்டத்துக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப்பிரசுரங்கள் 'கிறீன் றிங்கோமலே' அமைப்பினால் இடங்களில் நேற்று ஞாயிற்றுக்கழமை(22) விநியோகிக்கப்பட்டன.

இவ்வாறான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள், கடற்கரை, சந்தை, மதஸ்தலங்கள் மற்றும் சுற்றாடல்களிலும் அதன் அங்கத்தவர்களினால் வழங்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிந்தது.

அனல் மின்நிலையத்தினால் நீர் எவ்வாறு பாதிக்கப்படுகின்றது.

இரசாயன கலவை கலப்பதால் நிலத்தடி நீர், கடல் நீர் நஞ்சாக மாற்றமடையும். கடல் நீரில் இரசாயனம் கலக்கப்படுவதனாலும் அனல் உலைகளை குளிர்வித்தலுக்காக கடல் நீர் பயன்படுதப்படுவதாலும் கடல் வாழ் உயிரினங்களின் உணவுச்சங்கிலி உடைந்து மீனினங்கள் முற்றாக அழிவடையும்.

நிலத்தில் இரசாயனங்கள் வீழ்படிவடைவதால் நிலவளம் குன்றி மலடாகி விளை நிலங்கள் பாதிப்படையும் மேய்ச்சல் நிலங்கள் இல்லாது போகும்.

காற்றில், கந்தகம், காபனீரொட்சைட், நைதரசன் ஒக்சைட் போன்ற மனிதர்களில் பாதிப்பை ஏற்படுத்தும் வாயுக்கள் அளவுக்கு அதிகமாக வெளியேற்றப்பட்டு இருதயநோய், சுவாசநோய், புற்று நோய் என்பவற்றால் மனித இனம் பாதிக்கப்படும்.

பெண், கருவளம் பாதிக்கப்படும். கருச்சிதைவு, குறைமாதப்பிரசவம், அங்கவீனமான குழந்தை பிறத்தல், மூளை வளர்ச்சி குறைந்த பிள்ளைகள், நிறை குறைவான சிசுக்களை பிரசவித்தல் போன்ற பாதிப்புக்கள்  ஏற்படும்.

கதிர்வீச்சுத்தாக்கம், வளிமண்டத்தாக்கம், பாதரச தாக்கம், ஈயம் போன்ற பாதிப்புக்கள் ஏற்படலாம் என அஞ்சப்படுவதால் இவ்அனல் மின் நிலையம் அமைக்கப்படுவதால் பாதிக்கப்படுவது நீ, நான், எமது இயற்கை வளங்கள் என அந்த துண்டுப்பிரசுரத்தில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .