Sudharshini / 2015 மார்ச் 24 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.தியாகு, ஏ.எம்.அப்துல் பரீத்
இன்று இலங்கை அரசியலில் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த மாற்றங்கள். யாரும் எதிர்பார்க்காத வண்ணம் நடைபெறுகின்றது. இந்த நிலையில், சிறுபான்மையைச் சார்ந்த ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக வர முடியாதா. ஒரு காலத்தில், மறைந்த தலைவர் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவராக இருந்த வரலாற்று சரித்திரமும் எமது நாடாளுமன்றத்தில் உண்டு என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருகோணமலை, கிண்ணியா மத்திய கல்லூரியின் நிர்வாக கட்டடத்தை இன்று காலை (24) திறந்து வைத்து உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,
நாங்கள் இந்த நாட்டில் சிறுபான்மையினர் என்ற ரீதியில் ஜனாதிபதியாக வரமுடியாது. அதேபோல பிரதமராகவும் வர முடியாது. ஆனால், எதிர்க்கட்சி தலைவராக கூட வர முடியாதா?
இன்றைய சூழலில் சிறுபான்மை இனங்கள் ஒன்று சேர்ந்தால் நிச்சயமாக எதிர்க்கட்சி தலைவராக, சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஒருவரை கொண்டுவரமுடியும். அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால். மலையக மக்கள் முன்னணி அதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்க தயாராகவுள்ளது. இதனை நான் அரசியலாக பார்க்காமல் சமூக ரீதியில் சிந்தித்து எமது மத்தியில் ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்பதற்காகவே கூறுகின்றேன்.
ஆனால், இதனை வைத்துக்கொண்டு ஒரு சிலர் அரசியல் செய்ய முற்படுகின்றார்கள். அதற்கு சிறுபான்மை மக்களாகிய நாம் இடமளிக்ககூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட், உள்நாட்டு போக்குவரத்து பிரதி அமைச்சர் எம.;எஸ்.தௌபிக், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
16 minute ago
51 minute ago
54 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
51 minute ago
54 minute ago
57 minute ago