2025 ஜூன் 23, திங்கட்கிழமை

பிரிவினைவாதத்தால் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் ஒற்றுமை இல்லை

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 01 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

'கடந்த காலத்தில் ஒரு சில அரசியல்வாதிகளினால்; முன்னெடுக்கப்பட்ட  பிரிவினைவாதம் காரணமாக  தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமை  இன்றிய நிலை உருவாகியிருக்கின்றது. இந்த நிலையில்,  எதிர்காலத்தில் சமூகங்களை பிரித்து ஆளுவதற்கு எண்ணும் அரசியல்வாதிகளுக்கு மக்கள் பாடம் புகட்டவேண்டும் என்று கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர்  இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்தார்.

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் பழைய மாணவரும் கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளராகவும் பதவி உயர்வு பெற்றுள்ள வைத்திய கலாநிதி எம்.ஏ.எம்.பாஸியை   கௌரவிக்கும் நிகழ்வு,  திருகோணமலை சர்வோதயம் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (31) நடைபெற்றது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'கடந்த காலத்தில்  சமூக ஒற்றுமை என்ற விடயத்தை எம்மவர்கள் மறந்த  நிலையில்,  சமூக ஒற்றுமையை  நாம் வெளிப்படுத்தவேண்டும்.

தந்தை செல்வா எவரையும் வேறுவேறாக பிரிக்கவில்லை என்பதுடன்,  அனைவரையும் தமிழ் பேசும் மக்கள் என்ற ரீதியில் அவர் எண்ணினார்.

தற்போது தமிழ், முஸ்லிம் சமூகங்களும் ஒருமித்து செயற்படும் நிலை தோன்றியுள்ளது.   இந்த நிலையில்,  எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம்; அரசியல்வாதிகள் ஒற்றுமையாக இருந்து எமது சமூகங்களை கட்டியெழுப்புதல் வேண்டும்.

கடந்தகால போராட்டம் காரணமாக கல்வியில் எமது சமூகம்  பின்தங்கியுள்ளது.  உலகில்  எழுத்தறிவு வீதம் அதிகமுள்ள நாடு இலங்கை. ஆனால்,  நாமோ அதில் மிகவும் பின்னடைவிலுள்ளோம். அந்த நிலையை மாற்றுவதற்கு நாம் பல முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றோம்.

எதிர்காலத்தில்  எமது சமூகத்தின் கல்வி நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமைக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும்' என்றார்.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான மா.நடராசா, ஞா.கிருஸ்ணபிள்ளை, இராஜேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .